ஞாயிறு, 11 நவம்பர், 2018

கனவுகளைச் சேகரிக்காதே-1

இந்தக் கதையை வாசிக்கும் அனைத்து இனியவர்களுக்கும் வணக்கம்..! வழக்கம் போல இந்தக் கதையிலும்... காமம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்..! ஆனால். .. காதல் தூக்கலாக இருக்கும்..!!! வாசியுங்கள்..!!!



சூரியன் மேற்கில் மறையத் தொடங்கிவிட்ட ... மாலை நேரம்.! நகரத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த.. அந்த பூங்கா. . கூட்டமின்றி காணப்பட்டது.! புஷ்பங்களைத் தாங்கிய செடிகளையெல்லாம் தாலாட்டிக் கொண்டிருந்த தெனறல்... மாலை நேர மலர்களையெல்லாம்... காதலனாய் தழுவி முத்தமிட்டுப் போனது.!!

பூங்காவின் மறைவான பகுதியில் அவர்கள் இருந்தார்கள்.! மறைவான பகுதி என்றாலே... அது.. காதலர்களுக்குச் சொந்தமான பகுதி.. என்று யூகித்துவிடலாம்!. காற்று கூட நுழைய முடியாத அளவு.. அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள் என்று சொன்னால் அது... சுத்தப் பொய்.!! ஏனென்றால். .காற்று அவர்கள் இருவருக்குமிடையே நுழைந்து. . அவர்கள் உடைகளோடு சில்மிசம் செய்து கொண்டிருந்தது.!!

'' சத்யா...!'' என்றான் பூவரசு.
'' ம்..!'' என்றாள் சத்யா.
'' உனக்கு கவிதை புடிக்குமா..?'' என ஆழ்ந்த பொருள் சொல்லும் கவிதைகள் எழுதுபவன் போலக் கேட்ட... அவன் தலைமுடி கலைந்திருந்தது! முகத்தில் இரண்டு வார கால தாடி இருந்தது.!
கண்ணங்கள் லேசாக ஒடுங்கி... கண்கள் உள்வாங்கியிருந்தன.! அந்தக் கண்களில் ஏராளமான கனவுகள் இருந்தன.! அவனது உடையில்..ஒரு அலட்சியம்... அல்லது ஆர்வமற்ற.. தன்மை தெரிந்தது! 

''ஓ... புடிக்குமே..!'' என அப்பாவிபோலத் தலையாட்டியவள்... அவனைவிடக் கொஞ்சம் ஆரோக்யமாக இருந்தாள்.! அவள் கண்ணங்கள் புஷ்டியாக இருந்தன.! கண்கள் பெரிதாக இருந்தன.! லேசாய் கலைந்து விட்ட கூந்தலில்... வாடிப் போன.. ஒற்றை ரோஜா.. இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது.! அவளும் அலங்காரத்தில் அக்கறை காட்டுபவளாகத் தெரியவில்லை. ! ஆனால். .. அவனைப் போல அலட்சியமோ.. ஆர்வமற்ற தன்மையோ... அவளிடம் காணப்படவில்லை. ! 

'' எனக்கு புடிக்காது '' எனச் சிரித்த.. அவன் உதட்டுக்கு.. சிகரெட் பரிச்சையமில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. !
'' ஏன். .?'' என வினவிய.. அவளது உதடுகள். . அவன் உதடுகளைக் காட்டிலும்.. சிவப்பாக... பெண்களுக்கே உரிய... கவர்ச்சியுடன் இருந்தது.!
''எனக்கு என் சத்யாவதான புடிக்கும் '' என்ற.... 'கடி'த்தணமான ஜோக்கைக் கேட்டு...அவள் உதட்டின் ஓரங்கள் சுழிந்து....ஒரு இகழ்ச்சியைக் காட்டின.!
'' ஒரு.. கவிதைய படிச்சிப் பாத்த பின்னாலதான.. அத புடிச்சிருக்கா இல்லையானு சொல்ல முடியும். .?'' என்ற அவள் கேள்வியில் அர்த்தமிருப்பதாய் அவனுக்கும் படவில்லை.
'' ஆ...மாம் '' என்றான்.
'' நீங்கதான் என்னை இன்னும் படிக்கவே இல்லியே...?'' தன் கால்களைக் கட்டிக்கொண்டு... கால் மூட்டுக்களின்மேல்.. ஒரு பக்கக்கண்ணத்தைப் பதித்து... அவனைப் பார்த்தாள். 

'' நான் சொன்ன என் சத்யா... ஒடம்பல்ல... மனசு..!'' என்று அவள் தோளில் கை போட்டுக் கொண்டதில்... அவளிடம் அவனுக்கிருக்கும்.. உரிமையும். . நெருக்கமும்..நன்றாகத் தெரிந்தது.
''உன் மனச நான் எப்பவோ படிச்சிட்டேன் ''
'' என் மனச.. எப்ப படிச்சீங்க.. எனக்கு தெரியாம..?'' என்ற அவளது கொஞ்சலான கேள்வியில்... அவனது நெருக்கமோ.... அணைப்போ.. உடல் ஸ்பரிசங்களோ... அவளுக்குப் புதுசில்லை என்பதும் நன்றாகவே தெரிந்தது..!
'' நீ.. என்னைப் படிக்க ஆரம்பிச்சப்பவே..'' என்றான்.
'' நான் எப்ப உக்கள படிக்க ஆரம்பிச்சேன்..?'' என்றாள்.
'' நீ என்னை காதலிக்க... ஆரம்பிச்சப்பவே..''
'' நா.. எப்ப உங்கள காதலிக்க ஆரம்பிச்சேன்.?''
'' நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சப்பவே..''
'' நீங்க எப்ப என்னை காதலிக்க ஆரம்பிச்சிங்க..?''
'' நீ என்னை காதலிக்கறேனு.. தெரிஞ்சப்பறம் ''
'' நான் உங்கள காதலிக்கறேனு.. உங்களுக்கு எப்படி தெரிச்சிது?''
''என்னப் பாத்து நீ..'ஐ லவ் யூ ' சொன்னதால..''
'' நா.. எப்ப ஐ லவ் யூ சொன்னேன் ?''
'' ம்.. ம்... மழையே வராத அன்றொரு நாள். . நான் காத்துக் கொண்டிருந்தேன்.. பேருந்து வருமென்று. .! ''
'' என்னவோ ஒரு நாவல் எழுத ஆரம்பிக்கற... மொதல் வரி மாதிரி இருக்கு...''
'' ச்சூ...! குறுக்க பேசாத..! வந்தாய் நீ... வாழ்க்கை பேருந்து போல..! கேட்டாய் என்னை...!''
முகத்தில் புண்ணகை தவழ..பழைய நினைவுகளில். . மூழ்கினாள்.
'' ம்... என்ன கேட்டேன். .?''
அவனும் தன் நாடக வசனத்தைத் தொடர்ந்தான்.
'' சாப்பிடலாமா... காபி என்று..''
'' ஆ..! கேட்டேன்..!''
'' விரைந்து போனோம் நாம் விடுதிக்கு..''
'' எந்த விடுதி.. ?''
'' அடுமணை...! அடுமணைக்குப் போய் அமர்ந்தோம் இருக்கையில்..! அருந்தினோம் காபி. . !''
'' அதை மட்டும் ஏன் காபினு சொல்லனும்..?? கொழம்பி.. இல்லன்னா... கடுங்குவளை நீர்னு சொல்லவேண்டியது தான..!!''
'' ச்சூ.. குறுக்க பேசாத..! அப்போதுதான் இதோ... இப்படி'' நாவால்.. தன் உதடுகளைத் தடவிக்காட்டினான்.''உன் உதட்டை ஈரம் பண்ணிட்டு... என்னை பாத்து ' நா உங்கள.. ஐ லவ் யூ ' பண்றேம்பானு.. சொல்லி வழிஞ்ச..!''
அவனது குறும்பான சேட்டைகளை... ரசித்து சிரித்தாள். அந்த ரசிக உணர்வை முடிக்க விரும்பாமல்..
'' நானா... வழிஞ்சேன்..?'' எனக் கேட்டாள்.
'' வேற யாரு நானா...?''
'' ஆமா. .. சொன்னப்பறம் நீங்க வழிஞ்சீங்க...''
''உனக்காக நானும்... எனக்காக நீயும். .. வழிஞ்சோம்... ஈ... ஈஈஈனு. ''
'' வழிஞ்சது அசிங்கமா இருக்கு''
'' ஆமா. . வழிஞ்சா... அசிங்கமாத்தான் இருக்க்கும். ''
'' நான் வழிசலை சொல்லல..! வழிஞ்சதுன்ற வார்த்தையைச் சொன்னேன். ''
இருவரும் இணைந்து சிரித்தார்கள். கலைந்த அவள் கூந்தல் மயிரிழைகள்... அவன் கண்ணத்தை ஸபரிசித்தன. அவனோ... அவளோ... அதை விலக்க.. முனையவில்லை. ! அவளை அணைத்தவாறு... அவள் தோளில் முகம் தாங்கினான்.

'' சரி.. நான் கடிக்கட்டுமா..?''
'' என்னது...?''
'' உன்... ஆப்பிள்...''
'' இது பார்க்...''
'' பார்க்லதான் மேயனும்..''
'' மேயனும்...மீன்ஸ்...?''
'' சுவைத்தல்...!''
'' எதை...?''
'' உன் ஆப்பிள். . ஆரஞ்சு. ..திராட்சை. .!''
'' சீ...'' அவன் புஜத்தில் குத்தி வெட்கப் பட்டாள். அல்லது படுவதாக நடித்தாள்.!
'' டீ..''
'' ஐய.. கடி...''
'' ஜோக்...''
'' அறுவ்வ்வ்வை...''
'' சிகிச்சை பண்ணட்டுமா..?''
'' எப்படி. ..?''
'' இதோ... இப்படி...! ப்ச்.. ப்ச்..'' அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
'' குறும்பு..''
'' கரும்பு..!''
அவள் கண்ணத்தைக் கவ்வினான்.! புட்டுக் கண்ணத்துச் சதையை.. வாய்க்குள் இழுத்து. .. மெண்மையாகக் கடித்தான். நாக்கால் கண்ணமெங்கும் கோலமிட்டான்! வாயை விலக்கி... அவள் சுடியின் துப்பட்டாவை எடுத்து. . அவளது கண்ணத்து எச்சிலைத் துடைத்து விட்டான்.! அவளும் தன் கண்ணம் தடவினாள்.!
'' அட. .'' அவள் கையைப் பிடித்தான்.
''உன் கைல எழும்பே இல்ல...! மெத்.. மெத்னு இருக்கு..!''
'' அய்.. ய்..!'' செல்லச் சிணுங்கல்.
'' வளையல் புதுசு..!''
'' இல்ல. . பழசு..! பழசு.. கண்ணா பழசு...!''
உடனே அவள் காதில் தொங்கிய.. ஸ்டட்டைத் தொட்டான்.
''ஸ்டட்.. புதுசு.. கண்ணே புதுசு.''
'' பழசு கண்ணா பழசு..''
கழுத்து செயினைத் தொட்டான்.
''புதுசு கண்ணே புதுசு. .''
'' பழசு.. கண்ணா பழசு..''
'' சே.. !! '' சட்டென அவள் காலைத் தொட்டான்.''எஸ்.. ஐ காட் இட்..! கொலுசு... புதுசு..கண்ணே புதுசு..''
'' ஐயோ. . அறிவு. .! இன்னிக்கு நான் கொலுசே போடல..! லூசு கண்ணா லூசு..!''
'' சே..! ஆமா ஏன் போடல..?''
'' கட்டாகிருச்சு.. மாத்தனும்..''
'' பரவால்ல.. ! நீ.. போட்றுக்கறதா.. கற்பனை பண்ணிக்கிறேன். !''
'' அழகு..! வேறென்ன கற்பனை பண்ணிகிட்டீங்க..?''
'' அவசியம் சொல்லனுமா..?''
'' சொல்லுப்பா. .!''
'' ம்.. சரி..'' என அவள் காதில் சொன்னான். ' அது ரகசியம் '
'' சீ...! அப்படியெல்லாம்.. கூட கற்பனை பண்ணுவிங்களா..?'' என அப்பாவி காதலி போலக் கேட்டாள்.
'' ஏன். . நீ வேண்டாம்னு சொல்வியா..?''
'' ம்கூம்...! ' சீ 'னு வெக்கப் பட்டுட்டே...''
'' ம்.. பட்டுட்டே. .?''
'' ஒன்ஸ்மோர்ம்பேன்..!''
'' அப்ப... நீ.. 'சீ ' சொன்னா.. ஒன்ஸ்மோர்னு அர்த்தமா...?''
கண்கள் சுருங்கச் சிரித்தாள்.
''ம்...ம்...!''
அவளின் மெல்லிய சரும நிற உதடுகளை நீவினான்.
''உன் லிப்ஸை தர்றியா..?''
'' எதுக்கு..?''
'' எனக்கு தாகமா.. இருக்கு..''
'' சீ...'' அந்த 'சீ 'யின் அர்த்தம் புரிந்து நிதானமாகவே அவளது ஈர இதழ்களைக் கவ்வினான். இன்ப ரசம் வழிந்த. .இதழ்களில்.. சில நொடிகள்.. இதழ் 'கள் ' குடித்தான்.!
விலகி..''இன்னொரு சீ சொல்லேன் சத்யா..'' என்றான்.
'' ம்கூம்'' ஸ்டட் ஊசலாடின.
''நான் கெளம்பறேன்''
'' ம்...! சரி..!'' லேசாக முறைத்தாள் ''கெளம்பறேன்னா உடனே சரின்றதா..?''
'' வேற என்ன சொல்ல..?''
'' நோ.. ! கூடாதுனு சொல்லனும்..!''
'' சொன்னா..?''
'' முடியாது எனக்கு நேரமாச்சும்பேன்.''
'' உம்.. ''
'' இன்னும் கொஞ்ச நேரம் இரேன்..ப்ளீஸ்னு கெஞ்சற மாதிரி சொல்லனும்.. நீங்க. .?''
'' உம்...?''
'' உடனே நான் எங்க வீட்ல தேடுவாங்கனு பொய் சொல்லுவேன். .''
'' ஓ..கோ...! அப்றம்..?''
'' சரி. . போறதே போற... இன்னொரு தடவ..'சீ ' பண்ணிட்டு போயேன்னு சொல்லனும்..!''
'' சொன்னேன். ..''
'' நா... மாட்டேம்பேன்..!''
'' ஏன்.... ஏன். ..?'' என்றான். ஆர்வமாக..! நடிப்பு..!!
கலகலவெனச் சிரித்தாள். மொத்தமாய் அவன் தலைமுடியைக் கலைத்து விட்டாள்.
'' நீங்க 'ப்ளீஸ். . ப்ளீஸ் சத்யா'ங்கனுமே..!!''
'' ஓகே. . ஐ.. 'ப்ளீஸ். . ப்ளீஸ். . சத்யா..!''
''நான் அதெல்லாம் முடியவே முடியாதும்பேன்..''
'' எங்கே.. என்னை நேராப் பாத்து சொல்லு..?''
'' ச்சூ..! நோ சீரியஸ். . ஒன்லி.. ஆக்ட்டிங்..'' செல்லமாய் கோபித்தாள்.!
'' ஓகே...'' என்றான்.
'' ப்ளீஸ்... டியர் கண்ணம்மாங்கனும் நீங்க. ..''
'' ..ன்னேன்..!'' ஆமோதித்தான்.
'' நோ..! இதுவே அதிகம்பேன் ''
'' சரிதாம்பேன்..''
'' எம்மேல கோபமாம்பேன்..''
'' ஆமாம்பேன்..''
''ஜில்லுனு ஒண்ணு தரட்டுமாம்பேன்...''
'' சரிம்பேன்...''
'' தப்பு. .'' என அவன் தோளில் குத்தினாள். ''நீயும் வேண்டாம். .உன் ஜில்லும் வேண்டாம்... போடீ ' ங்கனும்..''
'' ...ன்னா...?'' அவன் மார்பில் தன் முதுகைச் சாய்த்தாள்.
''இப்படி உங்க மார்ல சாஞ்சுப்பேன் ''
'' அப்றம்..?'' அவளின்... இடுப்பில் கை போட்டு. . அவளை வளைத்தான்.
'' புன் சிரிப்போட... இப்படி பாப்பேன்..'' என இதழ்கள் மலர.. ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.!
'' உர்ர்னு.. என் மூஞ்சிய நான் இப்படி திருப்பிக்கனும். .'' எனத் திருப்பிக் கொண்டான்.
''வெரிகுட்...! அப்றம் நான்... இப்படி...!! '' என அவன் கண்ணத்தில் அவளின் உதடுகளைப் பதித்தாள்.
''இப்படி. ..நான். .!!'' என அவளின் பஞ்சு.. போன்ற.. பருவப் பந்தை.. இருகப் பற்றினான்.!
'' ச்சூ...! அதில்ல..!'' என அவன் கையை விலக்கி விட்டாள்.''இப்படி முறைக்கனும். .''என முறைத்துக் காண்பித்தாள்.
அவனும் முறைத்தான்.!
'' சோ...! கோபமா இருக்கற உங்கள.. சமாதானப் படுத்த.. நான் இப்படி ஒண்ணு தருவனாம்..'' என.. கழுத்தை வசதியாகத் திருப்பி.. அவன் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள்.!! ''
அப்றம்...??'' அவளைத் தழுவினான்.!
'' அப்பறம்...!!'' அவன் அணைப்புக்குள்.. அடைக்கலமானாள்.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக